நாகப்பாவை மீட்க கிருஷ்ணாவுக்கு ஜாதிரீதியில் நெருக்குதல்
பெங்களூர்:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப வேண்டும் என பெங்களூரில் நடந்த முக்கியமடாதிபதிகளின் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஒவ்வொரு முக்கிய ஜாதிக்கும் தனித்தனியே மடங்கள் உண்டு. கடத்தப்பட்ட நாகப்பா லிங்காயத்து ஜாதியைச்சேர்ந்தவர். இதனால் இவருக்கு ஆதரவாக வீர சைவ மடங்கள் களத்தில் குதித்துள்ளன.
முதல்வர் கிருஷ்ணா ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்தவர். இந்த இரு இனத்தினருக்கும் எப்போதும் அரசியல்ரீதியிலும் சமூகரீதியிலும்பிரச்சனை இருந்து கொண்டே இருப்பது வழக்கம்.
நாகப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் அவரை விடுவிக்க ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த கிருஷ்ணா முழுமனதுடன் முயற்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் நாகப்பாவின் சமூகத்தைச் சேர்ந்த மடங்களின் தலைவர்கள் நேற்று பெங்களூரில் கூடி விவாதித்தனர்.
அதில் வீரப்பன் கோரியபடி நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப கர்நாடக அரசு முயற்சி எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக இந்த மடாதிபதிகளைச் சந்தித்த நாகப்பாவின் மனைவி கண்ணீர் மல்க தனது கணவரை மீட்க உதவுமாறு கோரி மனுஒன்றை அளித்தார்.
-->












Click it and Unblock the Notifications