நெடுஞ்சாலையில் விபத்தா? 1033 எண்ணை அழையுங்கள்.. ஆம்புலன்ஸ் விரைந்து வரும்
சென்னை:
தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. விபத்தில் காயமடைந்தவர்களுக்குஅருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை தரவே பல நூறு கி.மீ. தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வழியிலேயேஅவர்கள் உயிரிழக்கும் சோகமான நிலைமை உள்ளது.இதைத் தவிர்க்க நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே அவசர முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. முதல் கட்டமாக 13 முதலுதவி சிகிச்சை மையங்கள் நேற்று இயக்கி வைக்கப்பட்டன.
பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தலைமையில் ஆம்புலன்ஸ், பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்கள் ஆகியவை இந்த மையங்களில்எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.
ரூ. 78 லட்சம் செலவில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் இந்த முதலுதவிமையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் அப்பல்லோ மருத்துவமனை இந்த முதலுதவி மையத்தைஅமைத்துள்ளது.
மாமண்டூரில் மியாட் மருத்துவமனையும் இந்த மையத்தை அமைத்துள்ளது. இதே போல சாரம், விழுப்புரம், இளஞ்சியம்,பெரம்பலூர், காவேரிப்பாக்கம், திருவல்லம், ரத்தினகிரி, பள்ளிகொண்டா, புதுக்கோவில், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய ஊர்களைஒட்டிய நெடுஞ்சாலைகளில் அவரச முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும். 1033 என்ற தொலைபேசி எண்ணில் இந்த மையங்களை கட்டணமில்லாமல்தொடர்பு கொள்ள முடியும்.
விபத்தைப் பார்த்த பொது மக்கள் அல்லது விபத்தில் சிக்கியவர்கள் 1033 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிவரத்தைக் கூறினால் அருகில் உள்ள முதலுதவி மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேரும்.
அப்பல்லோ, மியாட் மருத்துவமனை, சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன், கோவை மருத்துவ மையம், சேலம் கோகுலம்மருத்துவமனை ஆகியவற்றின் உதவியுடன் இந்த மையங்கள் செயல்படும்.
இப்போது அமைக்கப்பட்டுள்ள 13 மருத்துவ மையங்களில் 8 முதலுதவி மையங்களின் செலவை தமிவக அரசும், மீதம் உள்ள 5முதலுதவி மையங்களை அந்தந்த மருத்துவமனைகளும் ஏற்றுக் கொள்ள உள்ளன.
அப்பல்லோ மற்றும் மியாட் மருத்துவமனைகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 2 முதலுதவி மையங்களை நேற்று முதல்வர்ஜெயலலிதா இயக்கி வைத்து ஆம்புலன்ஸ்களின் சாவிகளை வழங்கினார்.
-->
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications