காஷ்மீர்: ராணுவ முகாமில் தாக்குதல்- 6 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகரில் உள்ள ஒரு ரிசர்வ் போலீசாரின் முகாமை இன்று காலை தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர்கடுமையாகத் தாக்கியதில் 6 போலீசார் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
அதிகாலை 5.45 மணிக்கு ரீகல் சவுக் பகுதியில் உள்ள பாம்போஷ் ஓட்டலில் செயல்பட்டு வந்த ரிசர்வ்போலீசாரின் முகாமை சில பயங்கரவாதிகள் திடீரென்று தாக்கினர்.
இந்த முகாமுக்குள் புகுந்த வேகத்தில் அவர்கள் போலீசாரை நோக்கி சராமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
இதையடுத்து போலீசாரும் சுதாரித்துக் கொண்டு பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ஆறு ரிசர்வ்போலீசாரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர். மேலும் ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர்.
போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெளியிலிருந்துதுப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே தப்பி விட்டான்.
அப்பகுதி முழுவதையும் சீலிட்ட போலீசார் தப்பியோடிய மூன்றாவது பயங்கரவாதியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவிதமான பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால்ஜெய்ஷ்-ஏ-முகம்மது அல்லது லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்கள் தான்இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.
காஷ்மீரில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மக்கள் குடியரசுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியின் முதல் சட்டசபைக்கூட்டம் நேற்று தான் தொடங்கிய நிலையில், பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->