பஸ்கள் தனியார்மயம்: கொள்கை முடிவல்ல, "கொள்ளை முடிவு"- இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கத் திட்டமிட்டிருப்பது அதிமுக அரசின் கொள்கைமுடிவல்ல, கொள்ளை முடிவு என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரடைந்து விட்டதாக சட்டசபையில் அமைச்சர்களே ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் அதைத் தனியார்மயமாக்க வேண்டியதன் நோக்கம் என்ன?
தமிழக அரசுக்கும் சில தனியார் நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான பேரம் நடந்துள்ளது.
இதன் காரணமாகவே போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
அதிமுக அரசின் இந்த முடிவு ஒரு கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு தான் என்று அவ்வறிக்கையில்இளங்கோவன் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications