ஓடும் ரயிலில் தாவி ஏறிய ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து சாவு
சேலம்:
சேலத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய 2கால்களும் துண்டாகி பரிதாபமாக பலியானார்.
கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்து வந்தவர் சம்பத்.
சென்னையில் நடைபெறவுள்ள ரயில்வே அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ரயிலில் சென்றுகொண்டிருந்தார்.
இடையில் சேலத்தில் அந்த ரயில் நின்ற போது, ரயிலிலிருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நின்று நண்பர்களுடன்பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ரயில் கிளம்பவே, சம்பத் ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றார். ஆனால் அவருடைய பிடி நழுவிரயிலிலிருந்து அவர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இரண்டு கால்களும் துண்டாயின.
ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சம்பத் அடுத்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் ரயில்வே அதிகாரிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-->