For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் ஒரு பெண் நக்சலைட் உள்பட 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

தருமபுரி:

தருமபுரி அருகே காட்டுக்குள் தேடுதல் வேட்டை நடத்தி வரும் போலீசார் இன்று காலை ஒரு பெண்நக்சலைட்டையும் ஒரு ஆண் நத்சலைட்டையும் கைது செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரவாதிகளைத் தேடி சேலம் டி.ஐ.ஜி. தமிழ்ச் செல்வன், எஸ்.பி. பெரியய்யா, மற்றும்6 டி.எஸ்.பிக்கள் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

சென்ராயன் மலை, போச்சம்பட்டி, குச்சம்பட்டி உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இந்தத் தீவிரசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்ராயன் மலையில் இன்று நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் விஜயா என்ற பெண் நக்சலைட்டும், முனுசாமிஎன்ற நக்சலைட்டும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ. 60,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்இவர்களிடமிருந்தும் ஏராளமான துப்பாக்கிகள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவைகைப்பற்றப்பட்டன.

இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 25 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் பெண்கள்என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் சுட்டுசிவா என்ற நக்சலைட் கொல்லப்பட்டார்.

குண்டுக் காயம் அடைந்த பாலன் என்பவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 20நக்சட்ைடுகளும் சேலம் சிறையிலும் 5 பெண் தீவிரவாதிகளும் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி கருத்து:

இதற்கிடையே இந்தக் கைதுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்துக் கேட்டபோது, காஷ்மீரில் பொடா சட்டம்அமலில் இல்லாததால் தான் தீவிரவாதம் வளர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர் சிலர் (பா.ஜ.கவினர்). ஆனால், தமிழகத்தில் பொடாசட்டம் அமலில் இருந்தும் தீவிரவாதம் வளர்ந்தது ஏன் என்று கேட்டார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X