கடலூர் சிறையில் நெடுமாறனுடன் ராமதாஸ் சந்திப்பு
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறனைபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நெடுமாறனை இன்று சிறைக்குச் சென்ற ராமதாஸ் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம்ராமதாஸ் பேசுகையில்,
தமிழுக்கும் தமிழ் உணர்வுக்கும் எதிரானவர்களின் கூட்டுச் சதி காரணமாகத் தான் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய கைதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ள நெடுமாறன் விரைவில் வெளியில் வர வேண்டும் என்றார்ராமதாஸ்.
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் விடுதலை குறித்து நெடுமாறனிடம்பேசினீர்களா என்று நிருபர்கள் கேட்ட போது, அது பற்றிப் பேசவில்லை. ஆனால் பெரியார் திராவிட இயக்கத்தலைவர் கொளத்தூர் மணி தூது சென்றால் நாகப்பா நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன்" என்று பதில்கூறினார் ராமதாஸ்.
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி சிறையில்அடைக்கப்பட்டுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் சரணடைந்து விட்டார். மேலும் இப்பிரச்சனைநீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்துப் பேச விரும்பவில்லை" என்று ராமதாஸ் பதிலளித்தார்.
-->