கோவில்களில் கடும் போலீஸ் பாதுகாப்பு .. பூசாரிகளிடமும் சோதனை
சென்னை:
காஷ்மீரில் உள்ள ரகுநாத் கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தமிழககோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் ஜம்மூ நகரில் உள்ள ரகுநாத் கோவிலுக்குள் சமீபத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பயங்கரமானவெறித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் தீவிரவாதிகள் புகுந்து விடலாம் என்ற அச்சம் காரணமாக அனைத்துமுக்கியமான கோவில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கியக் கோவில்களில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கோவிலுக்கு வருபவர்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரேகோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், வடபழனிமுருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் உள்ளிட்ட கோவில்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, காஞ்சிபுரம்காமாட்சியம்மன் கோவில், திருவண்ணாமலை உள்ளிட்ட பக்தர்கள் அதிகமாகக் கூடும் அனைத்துக்கோவில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பூசாரிகளும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆங்காங்கே ரகசிய சர்க்யூட் கேமராக்கள் மூலமாகவும் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் நுழைந்தால் தாக்குதல் நடத்துவதற்காக அனைத்துக் கோவில்களிலும் ஆயுதமேந்திய போலீசாரும்அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர ரகசிய போலீசாரும் சாதாரண உடையில் பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரி தீவிரவாதிகள் பயம் தவிர நக்சலைட்டுகள் பயமும் தமிழக போலீசாரை ஆட்டிப் படைத்து வருகிறது.
தருமபுரி அருகே உள்ள காட்டுப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 25 நக்சலைட்டுகள் பிடிபட்டுள்ளனர்.இவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கியமான இடங்களைத் தகர்க்க சதி செய்தது அம்பலமாகியுள்ளது. இதில்கோவில்களும் அடங்கிய இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications