தர்மபுரியில் பள்ளி மாணவிகள் கடத்தல்: ஒரு மாணவி- மாணவன் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரியில் தன்னைக் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து பள்ளி மாணவி சாதுர்யமாக தப்பி விட்டாள். மேலும் ஒருமாணவனையும் கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டாள். ஆனால், மேலும் 2 பள்ளி மாணவிகள்கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்று காலை தர்மபுரி பேருந்து நிலையத்தின் அருகே பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவியின் அருகே வேன்வந்து நின்றது. அதில் உள்ளே இருந்த கும்பல் அந்த மாணவியை பிடித்து வேனுக்குள் இழுத்தது.

ஆனால், அவர்களின் கையைக் கடித்துவிட்டு அந்த மாணவி ஓடி வந்துவிட்டாள். அவளை சமாளிக்க முடியாமல் வேனில் இருந்தகும்பல் தடுமாறியபோது அதில் இருந்த ஒரு மாணவனும் தப்பி வெளியே வந்துவிட்டான்.

இருவரும் சேர்ந்து ஓடியதையடுத்து அந்த வேன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டது.

வேனுக்குள் மேலும் 2 மாணவிகள் இருந்ததாக தப்பி வந்த மாணவியும் மாணவனும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த வேன் ஊத்தங்கரை நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஊத்தங்கரை பகுதியில் தான் கடந்த 4 நாட்களாகநக்சலைட்டுகளை போலீசார் வலை வீசிப் பிடித்து வருகின்றனர்.

இந் நிலையில் இந்த மாணவிகள் கடத்தலில் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் விவகாரத்தால் தர்மபுரியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. கடத்தப்பட்ட குழந்தைகள் யார் என்று தெரியதததால்பயந்து போன ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று அவர்கள் பாதுகாப்பாகஉள்ளார்களா என்று பார்த்து வருகின்றனர். பலர் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நிறைந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+