For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வகுப்பறையில் மாணவி மர்மச் சாவு: கலவி அதிகாரிகள் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் 12ம் வகுப்பு மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் இன்று அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

மானாமதுரை அருகே முத்தனேந்தலைச் சேர்ந்த போஸ் பாண்டி என்பவரின் மகள் ரேவதி (17) மதுரை நிர்மலாபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு அவர் 10ம் வகுப்பு அறையில் தனது துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கினார். ரேவதி தற்கொலைசெய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இது தற்கொலையல்ல, இதில் ஏதோ மர்மம் உள்ளது என அந்தமாணவியின் பெற்றோர் கூறுகின்றனர்.

இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில் கல்வித்துறை அதிகாரிகளும் தங்கள் விசாரணையைஆரம்பித்துள்ளனர்.

பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவிகள், ஹாஸ்டல் வார்டன், ஹாஸ்டல் மாணவிகள் ஆகியோரிடம் கல்வித்துறைஅதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேவதியின் உடலில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில் எனது குடும்பத்துக்கு நான் கெட்ட பெயரைவாங்கித் தர விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மர்மச் சாவு நடந்த பள்ளி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து ஒருவித அச்சத்துடனேயே மாணவிகள்பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X