ஜாமீன் கோரி ஜி.கே. மணி மனு: 29ல் விசாரணை
சென்னை:
சமீபத்தில் சரணடைந்த பாமக தலைவர் ஜி.கே. மணியின் ஜாமீன் மனு வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
செங்கல்வராயன் அறக்கட்டளை நிர்வாகிகளைப் பதவியேற்க விடாமல் கலாட்டா செய்த காரணத்திற்காக மணிமற்றும் இன்னொரு எம்.எல்.ஏவான காடுவெட்டி குரு ஆகியோரைப் போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மணி சரணடைந்தார். இதையடுத்து அவரைநீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி முனிரத்னம் உத்தரவிட்டார்.
அரசியல் உள்நோக்கத்துடனேயே தன்னைக் கைது செய்திருப்பதாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமணி நிருபர்களிடம் கூறினார். ஆனால் மணியின் குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 17 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். காடுவெட்டி குரு இன்னும்தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் மணி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் மணியின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவரை போலீஸ் காவலில் வைத்துவிசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி போலீசார் தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும் என்றுகூறினார்.
-->