நவீனமயமாகும் சென்னை, மதுரை, திருச்சி ரயில் நிலையங்கள்
திருச்சி:
சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு ரயில் நிலையங்களிலும் மேலும் பல புதிய வசதிகளைஅறிமுகப்படுத்தி அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.கே. மூர்த்தி ரயில்வேத்துறை இணையமைச்சரான பின்னர் தமிழகத்தில் ஏராளமான புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. ரயில் நிலையங்களும் பொலிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது சென்னையின் 2 ரயில் நிலையங்களையும், மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களையும் மேம்படுத்த அவர்உத்தரவிட்டுள்ளார். இந்த 4 ரயில் நிலையங்களையும் பிற மாநிலங்களுக்கு ஒரு மாடலாக இருக்கும் வகையில் மாதிரி ரயில்நிலையங்களாக பொலிவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பிளாட்பாரங்களில் கிரானைட் பதிக்கவும், ரயில் நிலையங்களை அழகுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் கடந்த வாரத்தில் துவங்கிவிட்டன. இதற்கிடையே தமிழகத்தில் மேலும் ஒரு ஜன சதாப்தி ரயிலைஅறிமுகப்படுத்தவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-->












Click it and Unblock the Notifications