சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் 8 மாத குழந்தை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த உறைவு காரணமாக கை அழுகியதால், அறுவைச் சிகிச்சை மூலம் கைஅகற்றப்பட்ட 8 மாத ஆண் குழந்தை தற்போது உயிருக்குப் போராடி வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் தொடர்ந்து அவதிப்படும் அவல நிலை நீடிக்கிறது.

கர்ப்பிணிப் பெண்ணும், சிறுமியும் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக பரிதாபமாகஇறந்தனர். இதைத் தொடர்ந்து ஒரு டாக்டரும், மூன்று நர்ஸ்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த துயரமே மறையாத நிலையில் 8 மாத ஆண் குழந்தையான ஹூசேன் வயிற்றுப் போக்கு காரணமாக சேலம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆனால் டாக்டர்களின் அலட்சியம் காரணமாக அந்தக் குழந்தையின் வலது கையில் ரத்தம் உறைந்து, கைமுழுவதும் அழுகத் தொடங்கியது.

இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க வலது கையை வெட்டி எடுக்க வேண்டிய நிலைஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தையின் வலது கை ஆபரேஷன் மூலம் சமீபத்தில் அகற்றப்பட்டது.

இருப்பினும் ஆபத்து நீங்கவில்லை. குழந்தை தொடர்ந்து மயக்க நிலையிலையே இருப்பதால் அது உயிருக்குப்போராடி வருகிறது.

டாக்டர்களின் அலட்சியத்தால், கை துண்டிக்கப்பட்ட குழந்தையைப் பார்த்து அவனுடைய தாய் கதறிக் கதறி அழுதுகொண்டிருப்பதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சம் உறைந்து போகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+