கர்ப்பிணிகளுக்கு மாதம் 6 கிலோ அரிசி இலவசம்
சென்னை:
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சத்துக் குறைந்த இளம் பெண்களுக்கு மாதந்தோறும் 6கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகவும் பலவீனமான நிலையிலும், சத்துக் குறைவாக உள்ள நிலையிலும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும்தாய்மார்கள், இளம் பெண்களுக்காக மாதந்தோறும் இலவசமாக 6 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மத்தியஅரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை இப்போது தான் தமிழகம் அமல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம்மாவட்டங்களில் இத்திட்டம் நடைறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ரூ.1.8 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் 45,670 பெண்களும், ராமநாதபுரத்தில் 32,656 பெண்களும் இத்திட்டத்தால்பலனடைவார்கள்.
நியாய விலைக் கடைகள் மூலம் இந்த அரிசி விநியோகிக்கப்படும். 45 கிலோ எடைக்குக் கீழே உள்ள கர்ப்பிணிப்பெண்கள், 35 கிலோ எடைக்குக் கீழ் உள்ள இளம் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதிபடைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications