மாமனார் வீட்டிலேயே "கை வைத்த" இளைஞர்
சென்னை:
சொந்த மாமனார் வீட்டிலேயே திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தொப்பை முதலி தெருவைச் சேர்ந்தவர் சர்கார். இவரது மருமகன் அஸீம். மாமனார் வீட்டுக்கு அடிக்கடிவருவார் அஸீம். அப்போது வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்டார்.
இந்த நிலையில் சர்கார் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்குக் கிளம்பினார். இதை அறிந்து கொண்ட அஸீம்,சமீபத்தில் சர்காரின் வீட்டுக்கு வந்தார்.
கள்ளச் சாவி போட்டுக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தார். வீட்டில் இருந்த 28 சவரன் நகைகள், ரூ.15,000 பணம்ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டி விட்டு சென்று விட்டார்.
ஊரிலிருந்து திரும்பிய சர்கார் நகை, பணம் திருட்டுப் போனதை அறிந்தார். உடனடியாக போலீஸுக்குப் புகார்செய்தார்.
போலீஸ் விசாரணையில் அஸீம் தான் அவற்றைக் கொள்ளையடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையறிந்துஅவருடைய மாமனார் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.
அஸீமைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications