வேலூர் சிறையில் வைகோ-வெங்கையா சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைபா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இவர்களுடைய சந்திப்பு இன்று தான் ஒரு வழியாக நடந்தது.வைகோவும் வெங்கையா நாயுடுவும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

வைகோவை சந்தித்து விட்டு வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசிய போது,

பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பா.ஜ.க. கருதுகிறது. மேலும்அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்ந்திருப்பதையும் எங்கள் கட்சி விரும்பவில்லை.

காஷ்மீரிலும், வட-கிழக்குப் பகுதிகளிலும் அத்துமீறி நுழைந்து செயல்பட்டு வரும் தீவிரவாதிகளைஒடுக்குவதற்காகவே பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே இப்போது அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.

கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் நல்ல ஒன்று தான். இதை இந்தியா முழுவதிலும் அமல்படுத்துவது தொடர்பாகதேசிய அளவில் விவாதம் நடைபெற வேண்டும் என்றார் வெங்கையா நாயுடு.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+