தேர்வை நிறுத்த வெடிகுண்டு மிரட்டல்: மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

திருமங்கலம்:

திருமங்கலத்தில் தேர்வைத் தள்ளிவைப்பதற்காக தான் படித்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகதொலைபேசி மிரட்டல் விடுத்த ப்ளஸ் டூ மாணவனைப் போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம் காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு நேற்று அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அங்குள்ள ஒரு பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலமணி நேரங்களில் அந்தப் பள்ளி வெடித்துச் சிதறி விடும் என்றும் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்தெரிவித்தான்.

இதையடுத்து பதற்றமடைந்த போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் குறிப்பிட்ட அந்தப் பள்ளிக்குச்சென்று தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் சல்லடை போட்டுத் தேடிய பிறகும் வெடிகுண்டு எதுவும் அங்கு சிக்கவில்லை. இதையடுத்து அந்ததொலைபேசி மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.

இதற்கிடையே தொலைபேசி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேற்றேசம்பந்தப்பட்டவனைக் கைது செய்தனர்.

அவன் அதே பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வரும் சிவகுருநாதன் என்பது தெரிய வந்தது. நேற்று நடைபெற்றதேர்வை ஒத்திவைப்பதற்காகவே இந்த வெடிகுண்டுப் புரளியை அவன் கிளப்பியதும் தெரிய வந்தது.

சிவகுருநாதனைக் கைது செய்த போலீசார் இன்று காலை நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தினர். பின்னர் அவன்சிறையில் அடைக்கப்பட்டான்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+