நகைக் கடை கூரையை ஓட்டை போட்டு ரூ.25 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் ரூ.25 லட்சம் பெறுமானமுள்ள 5 கிலோ தங்க நகைகள்திருடப்பட்டுள்ளன.
எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, அருகிலேயே காவல் நிலையம் உள்ள தி. நகர் உஸ்மான்சாலையில் இந்த திருட்டு நடந்திருப்பது போலீஸாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நகைக் கடைகள் நிறைந்துள்ள உஸ்மான் சாலையில் போத்திஸ் ஜவுளிக் கடைக்கு எதிர்புறம் உள்ள ஷாப்பிங்காம்ப்ளக்ஸில் ஆனந்த் ஜூவல்லரி என்ற நகைக் கடை உள்ளது. மூன்று அடுக்குக் கொண்ட வணிக வளாகத்தில்தரைத் தளத்தில் இந்தக் கடை உள்ளது.
நேற்று காலை கடைக்கு வந்த ஊழியர்கள் கடையைத் திறந்து உள்ளே பார்த்தபோது, அங்கு ஒரு நகையையும்காணவில்லை. அத்தோடு கடையின் மேல் கூரையில் இருந்த கூரையும் ஓட்டை போடப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து பார்த்து ஆச்சரியமடைந்தனர். மிகவும் நுணுக்கமான முறையில் திருடர்கள் செயல்பட்டிருப்பதுதெரிய வந்தது. சப்தமே வராத கருவி மூலம் மேல் கூரையில் ஓட்டை போட்டுள்ள திருடர்கள் உள்ளே நுழைந்துஅத்தனை நகைகளையும் சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளனர்.
மேல் சுவரை அவர்கள் துளைத்தபோது அந்த சப்தம் அக்கம் பக்கத்தில் இருந்த வாட்ச்மேன்களுக்குக் கூடகேட்கவில்லை. அத்தனை நுணுக்கமான கருவியை அவர்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
போலீஸ் மோப்ப நாய், நகைக்கடைக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் வரை சென்று திரும்பியது.எனவே கட்டட வேலைக்கு வரும் நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேககப்படுகிறார்கள்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இணை கமிஷனர் திரிபாதி, துணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
-->