For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தனி அறை மறுப்பு: இளங்கோவன் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி வளாகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு தனி அறை தரப்படாதது தொடர்பாகபோராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு என்று தனியாக அறை எதுவும் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து கவுன்சிலர்கள் கூட மாநகராட்சி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக விரைவில் காங்கிரஸ் முடிவெடுக்கும் என்றார்இளங்கோவன்.

இதற்கிடையே வரும் டிசம்பர் 4ம் தேதி நடக்கும் புதிய நிர்வாகிகளின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மக்கள் விரோதஅதிமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 54 மாவட்டங்களடங்கியபிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றுக்கான துணைத் தலைவர்கள், செயலாளர்கள், துணைச் செயலாளர்கள்,அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X