For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக காவல்துறையில் கருப்பு ஆடுகள்: டி.ஜி.பி. தகவல்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

தமிழகத்தில் நக்சலைட்டுகள் இந்த அளவுக்கு வளரக் காரணம் போலீஸ்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் தான்காரணம் என டி.ஜி.பி. நெயில்வால் கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பது சில கிராமவாசிகளின்தகவல் மூலம் போலீசாருக்குத் தெரிந்தது. தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய தமிழகஉளவுப் பிரிவினர் இதில் முழுத் தோல்வி அடைந்துவிட்டனர்.

நக்சல்கள் குறித்து காவல் நிலையங்களில் சில கிராமவாசிகள் தகவல் கொடுத்தபோதும் அதை ஏட்டுகளும்இன்ஸ்பெக்டர்களும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

இதையடுத்து தர்மபுரி மாவட்ட க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு அந்க கிராமவாசிகள் தகவல் தந்தனர். இதன் பின்னர்தான் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு சுமார் 25 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.

விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த டி.ஜி.பி. நெயில்வால் தானே தர்மபுரிக்கு வந்தார், நக்சல்கள் தேடுதல்வேட்டையை நேரில் பார்வையிட்ட அவர் அம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை ஒரு பிடி பிடித்தார்.

பின்னர் வேலூர் வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், பிடிபட்டுள்ள நக்சலைட்டுகள் மீதுபொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

இந்த நக்சலைட்டுகளுக்கும், வீரப்பன் கும்பலுக்கும் தொடர்பு இல்லை. அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டுள்ள நோட்டீஸ்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை தெலுங்கில் எழுதப்பட்டிருந்தன.

எனவே ஆந்திர மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள மக்கள் போர்க்குழு நக்சலைட்டுகளுக்கும் இவர்களுக்கும்தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரம் அல்-உம்மா கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு ஏதும்இருப்பதாகத் தெரியவில்லை.

தடை செய்யப்பட்டஇயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாலும், பயங்கர சதி வேலையில் ஈடுபட்டிருந்ததாலும்இவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். பிடிபட்டவர்கள் மீது கண்டிப்பாக பொடாசட்டம் பயன்படுத்தப்படும்.

காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளும் இந்த நக்சலைட்டுகள் இந்த அளவுக்கு வளர காரணமாகஇருந்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு களையப்படுவர்.

தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட் வேட்டை தொடர்ந்து நடைபெறும். தற்போது தலைமறைவாகியுள்ள 4 அல்லது 5நக்சலைட்டுகளைத் தேடிப் பிடிக்க 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேடுதல் வேட்டையின்போது பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை என்றார் டி.ஜி.பி.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X