சேரன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: கோவை ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம்புரண்டது.
சென்னையில் நேற்றிரவு புறப்பட்ட இந்த ரயில் இன்று காலை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. அங்குபயணிகள் அனைவரையும் இறக்கிவிட்ட பின்னர் பணிமனைக்குச் செல்வதற்காக பின் பக்கமாக சென்றது.
அப்போது இந்த ரயிலின் கடைசி 4 பெட்டிகளும் தடம் புரண்டன. இதனால் இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியே செல்ல வேண்டிய பல ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
நீண்ட தூர ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்கு வராமல் போத்தனூருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. அதே போலகோவையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் போத்தனூரில் இருந்து தாமதாமாகப் புறப்பட்டு வருகின்றன.
ரயில்வே அதிகாரிகளும், பொறியாளர்களும் உடனே அங்கு விரைந்து தடம் புரண்ட ரயிலை அங்கிருந்து அகற்றும் பணியில்ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் இன்று மாலை முடிவடையும்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் செல்லும் பயணிகளுக்கு உதவ ரயில்வே நிர்வாகம் சில நடவடிக்களைஎடுத்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து மீட்டர் கேஜ் பாதையில் சில ரயில்கள் போத்தனூருக்கு இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் பெட்டிகளை தூக்க 15 போர்ட்டர்களை ரயில்வே நியமித்துள்ளது.
இச் சம்பவம் ஹைதராபாத்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-பொகாரோ எக்ஸ்பிரஸ் ஆகியவைகோயம்புத்தூர் ரயில் நிலையத்துக்கு வராமல் சென்றன.
மேலும் பாலக்காடு செல்லும் எல்லா ரயில்களும் போத்தனூர் வழியாக திருப்பிவிடப்பட்டுவிட்டன.
-->












Click it and Unblock the Notifications