பொன்முடியின் ஹீரோ ஹோண்டா ஷோ-ரூமில் போலீஸார் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ஆட்டோமொபைல் ஷோரூமில் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

சில மாதங்களுக்கு முன்பு தான் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, பாண்டிச்சேரி வீடு, கடைகள்,பெட்ரோல் பங்குகள், ஹீரோ ஹோண்டா ஷோ ரூம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள்நடந்தன.

அப்போதே பொன்முடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும் பெங்களூரிலும் அவரது சொத்துக்கள்இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் சமீபத்தில் அன்பழகன், ஐ.பெரியசாமி, கே.என். நேரு ஆகிய திமுக தலைவர்களின் வீடுகளில்ரெய்ட் நடந்தது.

இப்போது மீண்டும் பொன்முடியின் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் அருகேஉள்ள சேலங்குப்பத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான ஹீரோ ஹோண்டா ஷோ ரூமில் நேற்றும் போலீசார் திடீர்சோதனையில் இறங்கினர்.

கடையின் அளவு, அதன் மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, மொத்த முதலீடு, இதன் பார்ட்னர்கள் குறித்தவிவரங்களை விசாரித்தனர்.

இதுகுறித்து பொன்டி கூறுகையில், இந்தச் சோதனைகள் அரசியல் உள் நோக்கம் கொண்டவை. விழுப்புரத்தில்சமீபத்தில் நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர் ஆகியோரின் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து திமுகசார்பில் ஒரு நாள் பந்த் நடத்தினோம். அது மிகவும் வெற்றிகரமாக நடந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா இந்த போலீசாரை அனுப்பி என்னையும் திமுகவினரையும் மிரட்டமுயல்கிறார். இதெல்லாம் எங்களுக்கு தூசு என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+