For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் மர்ம வெடிவிபத்து: 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பை அந்தேரியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே மெக்டொனால்ட் உணவகத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது.ஆனால், வெடித்தது என்ன என்று தெரியாமல் போலீசார் இன்னும் குழம்பிக் கொண்டுள்ளனர்.

நேற்று மாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் இறந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.

முதலில் தவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்துவிட்டதாக புரளி பரவியது. இதனால் நகர் முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. பின்னர் மெக்டோனால்ட் உணவகத்தின் சிலிண்டெர் வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், இப்போது கிடைத்துள்ள விவரத்தின்படி உணவகத்தின் மிகப் பெரிய ஏ.சி. இயந்திரத்தில் இருந்து குளிர் காற்றை எடுத்துவரும் குழாயில் ஏற்பட்ட வெடிவிபத்து தான் இது என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் இதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.ரசாயண சோதனைகளின் முடிவு கிடைத்த பின்னர் தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக நேற்று முழுவதுமேதொலைபேசிப் புரளிகள் கிளம்பின. இதனால் மும்பைவாசிகளிடையே பரபரப்பு இருந்த வந்த நிலையில் இந்த வெடிவிபத்துஏற்பட்டது.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X