For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க சு.சுவாமி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் எந்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அதில் பிரபாகனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்அம்சமும் இடம் பெற வேண்டும். இதை மத்திய அரசு இலங்கையிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

ராஜிவ் கொலையாளிகள் என்ற முறையில் பிரபாகரன் தவிர புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவர் பொட்டு அம்மனையும்ஒப்படைக்குமாறு இந்திய அரசு நெருக்குதல் தர வேண்டும். ராஜிவ் கொலையை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பிரபாகரன் ஒருதேடப்படும் குற்றவாளியாவார்.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசும் புலிகளும் பேச்சு நடத்தினாலும் இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்துதடை செய்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் அமெரிக்கா கண்டும்காணாமல் செயல்படுவது அந் நாட்டின் மீது இந்தியர்களுக்கு கோபத்தை விளைவிக்கும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளவேண்டும்.

பிரபாகரன் தலைமையிலான புலிகளுடன் இலங்கை அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது இந்தியாவுக்கு எதிரானசெயலாகத் தான் கருதப்பட வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X