கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மரணம்: காட்டில் பிணமாக கிடந்தார்
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா காட்டுக்குள் பிணமாகக் கிடந்ததாக கர்நாடகபோலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் காட்டுப் பகுதியில் தமிழக அதிரடிப் படை நடத்திய தாக்குதலில் வீரப்பனும், பிணைக் கைதியாக இருந்தநாகப்பாவும் சில அதிரடிப்படை வீரர்களும் குண்டுக்காயம் அடைந்திருப்பதாக முன்னதாக வந்த தகவல்கள் தெரிவித்தன.
அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் நாகப்பா காயமடைந்து விட்டதால் அவரை விடுவித்து விட்டதாக நேற்று நாகப்பாவின்குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்த கேசட்டில் வீரப்பனும் தெரிவித்திருந்தான்.
இதையடுத்து கர்நாடக போலீசார் காட்டுக்குள் சென்று நாகப்பாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை காட்டுக்குள் ஒரு இடத்தில் நாகப்பா கிடந்ததை கர்நாடக போலீசார் கண்டனர். அவசர அவசரமாகச்சென்று அவரை மீட்ட போது தான் நாகப்பா இறந்து போயிருப்பது தெரிய வந்தது.
ஆனால் நாகப்பா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. உண்மையிலேயே குண்டடி பட்டு தான் இறந்தாராஅல்லது அவர் இறப்புக்கு வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையே நாகப்பா இறந்து போன தகவல் தெரிய ஆரம்பித்ததும் பெங்களூரில் கடும் பதற்றம் தோன்ற ஆரம்பித்தது. இந்தப்பதற்றம் நாளை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. கர்நாடத்தில் வாழும் தமிழர்களும் அச்சத்துடன் வீட்டுக்குள்ளேயேமுடங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-->