காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக பலியாயினார்.
சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அப்போதுஎதிர்பாராதவிதமாக வீட்டுக்கு அருகில் இருந்த மின் கம்பம் கீழே விழுந்தது.
இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதன் மற்றும் மணி ஆகிய இரண்டு பேர் மின்சாரம் தாக்கி அங்தஇடத்திலேயே பலியானார்கள்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications