For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப்ரவரியில் சென்னை மாநகர மேயர் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மேயர் பதவிக்கான தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சென்னைஉயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் கமிஷன் மனு தாக்கல் செய்துள்ளது.

மேயர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், தேர்தலில் இரண்டாவது இடத்தைப்பெற்ற அதிமுக வேட்பாளர் பாலகங்காவை மேயராக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மற்றொரு மனுவில், மாநில அரசின் நிதி நெருக்கடியில், இப்போது மீண்டும் மேயர் தேர்தலை நடத்தினால்செலவீனம் ஏற்படும். எனவே மேயர் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மேயர் தேர்தலுக்குத் தடையெல்லாம் விதிக்க முடியாது என்று கூறியது.

மேலும் மேயர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்றைக்குள்கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

அதன்படி தமிழக தேர்தல் ஆணையம் இன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

வரும் பிப்ரவரி மாதம் சென்னை மாநகர மேயர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அம்மனுவில் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்போது குறுக்கிட்ட மைத்ரேயனின் வழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தேர்தலை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஆனால் நீதிபதிகளோ, தேர்தலுக்குத் தடை விதிக்கும் எண்ணம் கோர்ட்டுக்கு இல்லை. இந்த வழக்கின் அடுத்த கட்டவிசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X