தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் கொடுத்த 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் அளித்ததாக 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த தெளபீக் மற்றும் ஜக்காரியா ஆகிய இருதீவிரவாதிகளை கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் பலதீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தெளபீக் சென்னையில் தங்குவதற்காக இடம் கொடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணியில் மேன்ஷன் ஒன்றில் சில காலம் தெளபீக் தங்கியுள்ளார். அவருக்கு மேன்ஷனில் இடம்பார்த்துக் கொடுத்ததாக ஷாபுதீன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல, கொருக்குப் பேட்டையில் தெளபீக் தங்க ரூ.600 வாடைக்கு வீடு பார்த்துக் கொடுத்த தினகரன்என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஷாபுதீனும் தினகரனும் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications