தலித்துகள் மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை: திருமாவளவன்
மதுரை:
தலித்துகள் மதம் மாறுவது ஒன்றுதான் இந்த சமூகத்தில் அவர்களுக்குரிய அங்கீகாரத்தையும், உரிமையையும் பெறஒரே வழி என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்து சமுதாய அமைப்பில் தலித்துகள் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்என்றால், உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. தலித்துகள்மதம் மாறியே தீர வேண்டும்.
இந்துப் பெயர்களை கைவிடும் இயக்கம் வேகமாக நடந்து வருகிறது. இந்துப் பெயர்களை களைந்து விட்டுசுத்தமான தமிழ்ப் பெயர்களை தலித் மக்கள் சூட்டி வருகிறார்கள். இந்தப் பெயர் மாற்றப் பதிவுக்குரியகட்டணத்திலிருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழக கோவில்களில் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும். இதைக் கட்டாயமாக்க வேண்டும்.இதுதொடர்பாக மக்கள் இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.
-->












Click it and Unblock the Notifications