வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு- லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்சி:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்க வாசல் வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் நுழைந்து பெருமாளை தரிசித்த வண்ணம் இருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ளபெரும்பாலான பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை நடந்தது.
நேற்று இரவு முழுவதும் விழித்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் சொர்க்க வாசல் வழியாகநுழைந்து பெருமாளை வணங்கினர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஷேத்திரமான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமிகள், ரங்கநாயகிதாயார் சகிதம், அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக நுழைந்து வந்த பக்தர்களுக்கு தரிசனம்கொடுத்தார்.
சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், லட்சக்கணக்கான பக்தர்கள் "ரெங்கா... ரெங்கா..." என்று குரல் எழுப்பிக்கொண்டே சாரை சாரையாக உள்ளே நுழைந்து பெருமாளை தரிசித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் உலகளந்த பெருமாள் கோவில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கியமானபெருமாள் கோவில்களிலும் இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் அடுத்த மாதம் வரும் ஏகதாசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்புநிகழ்ச்சி நடைபெறும்.
-->












Click it and Unblock the Notifications