கான்ஸ்டபிள்களிடம் குறை கேட்பு: சென்னையில் குவிந்த 3,000 காவலர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் 3,000 போலீஸ் கான்ஸ்டபிள்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சிசென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று நடந்தது.

காவலர்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோட்டையில்நடத்தினார்.

அதேபோல கடைநிலைக் காவலர்களின் குறைகளை அவ்வப்போது கேட்க வேண்டும் என்றும் உயர் போலீஸ்அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 3,000 கடைநிலைக் காவலர்கள் (கான்ஸ்டபிள்கள்)தங்களது குறைகளைக் கூறுவதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர்கள் குவிந்துள்ளனர்.

இருப்பினும் இந்தக் குறை கேட்பு நிகழ்ச்சி கண் துடைப்பு என்றும், உண்மையிலேயே குறைகளைக் கேட்பதற்காகஇந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றும், அரசின் கேள்விகளிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இதுநடத்தப்படுவதாகவும் பல காவலர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு 15 சதவீத சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது போல தங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்றும், குழந்தைகளின் வேலை வாய்ப்பு மற்றும் மருத்தவப் படியை உயர்த்திக் கொடுக்க வேண்டும்என்றும் காவலர்கள் கூறினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+