For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3வது அணியை அமைக்க முடியும்: நல்லகண்ணு நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கோயம்பத்தூர்:

தமிழகத்தில் 3வது அணி அமைவது சாத்தியம்தான். ஆனால் அதற்கான சூழல், சமயம் இன்னும் உருவாகவில்லைஎன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறினார்.

கோயம்பத்தூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

3வது அணியை உருவாக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இருப்பினும் இதுகுறித்த தெளிவான சூழல்காணப்படவில்லை. பொதுப் பிரச்சினைகளின் அடிப்படையில் நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் தோழமையாகஇருக்கிறோம்.

சாத்தான்குளம் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியானவுடன், மார்க்சிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன்பேசுவோம். அப்போது 3வது அணி குறித்தும் பேசப்படும்.

குஜராத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி மூலம், தீய சக்திகளின் கரங்கள் வலுவாகி விட்டதையே உணர முடிகிறது.மதச்சார்பின்மை சக்திகள் பிளவுபட்டு நிற்பதையும் இது வெளிக்காட்டியுள்ளது. அனைவரும் ஒன்று சேர வேண்டியதருணம் வந்துவிட்டது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசுஉடனடியாக கேரள அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார் அவர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X