சார், அங்கிட்டு போங்க.. எங்கிட்ட பேசாதீங்க: நிருபர்களிடம் கெஞ்சிய போலீசார்
சென்னை:
பத்திரிக்கை நிருபர்களிடம் கான்ஸ்டபிள்களைப் பேச அனுமதித்த டி.ஜி.பி. அலுவலகத்தைச் சேர்ந்த 30போலீசாருக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று முதல் கடை நிலைக் காவலர்களிடம் (கான்ஸ்டபிள்) குறைகள் கேட்டு வருகிறார் தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால்.
நேற்று மட்டும் சுமார் 2,000 கான்ஸ்டபிள்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து குறைகளைத் தெரிவித்தனர்.இடமாற்றம், மருத்துவப்படிகள், வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள்டி.ஜி.பியிடம் தெரிவித்தனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது கான்ஸ்டபிள்கள் தங்களது குறைகள் குறித்து நிருபர்களிடமும் புலம்பல்களுடன்தெரிவித்திருந்தனர். இந்தக் குறைகேட்கும் நிகழ்ச்சி வெறும் கண்துடைப்புதான் என்பதை நிருபர்களிடம் அவர்கள்விளக்கினர்.
இந் நிலையில் இந்த கண்துடைப்பு குறைகேட்பு நிகழ்ச்சி 2வது நாளாக இன்றும் நடந்தது. சேலம், வேலூர், கடலூர் ,திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 போலீஸார் குறைகளைக் கூறுவதற்காகஇன்று குவிந்திருந்தனர்.
ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்தபோது டி.ஜி.பி. அலுவலக வளாகத்திற்குள் நுழைய நிருபர்களுக்கு திடீர் எனத் தடைவிதிக்கப்பட்டது.
அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாருக்கும், குறை சொல்ல வந்த போலீஸாருக்கும் நிருபர்களுடன் பேசத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் நிருபர்களைக் கண்டவுடன் போலீசார் அங்கிருந்து தெறித்து ஓடினர். நிருபர்கள் மீறிப்போய் பேசினாலும் முகத்தை திரும்பிக் கொண்டு கடுகடுத்தனர்.
அங்கிட்டு போங்க சார், எங்களை பாக்குறாங்க.. என் கிட்ட பேசாதீங்க சார்.. சொன்னா கேளுங்க என்று கெஞ்சினர்.
இந் நிலையில் நேற்று நிருபர்களை குறை சொல்ல வந்த போலீஸாருடன் பேச அனுமதித்ததாக 30 டி.ஜி.பி.அலுவலக போலீஸாருக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications