நிருபர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
கடலூர்:
கடலூரில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நிருபர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆபாசமாகவும், கடுமையாகவும் திட்டினார்.
தமிழகம் முழுவதிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பேரணி நிடத்தினர். ஆனால்இவர்களது ஊர்வலத்திற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.
இதேபோன்ற பேரணிக்கு கடலூரிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலூர்-பாண்டிச்சேரி சாலையில் ஏராளமானதொண்டர்கள் குவிந்திருந்தனர். அங்கிருந்து பேரணி கிளம்புவதாக இருந்தது.
போலீஸார் அந்தப் பேரணிக்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தடையை மீறிக் கிளம்பவே, போலீஸார்தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இதையடுத்து மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருடன் பேச உள்ளூர் நிருபர்கள் முயன்றனர்.ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் நிருபர்களைப் பார்த்து ஆவேசமாகவும் பேசினார் சந்திரசேகரன். இத்தனைக்கும் அவர் பக்கத்திலேயேடி.எஸ்.பியும் நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த ஆவேசமாகவும், ஆபாசமாகவும் பேசிய இன்ஸ்பெக்டரின் செயலைப் பார்த்து அதிர்ந்து போன நிருபர்கள்,நேராக எஸ்.பி. ராஜீவ் குமாரிடம் சென்று இது குறித்து எழுத்துப் பூர்வமாகப் புகார் கொடுத்தனர்.
-->