ரூ.1,00,000 கோடி மதிப்பில் நதிகளை இணைக்க நிபுணர் குழு அமைப்பு
டெல்லி:
நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதற்காக ரூ.1 லட்சம் கோடியில் மாபெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இத் திட்டத்தை அமலாக்க முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் சிறப்பு நிபுணர் குழுஅமைக்கப்பட்டுள்ளது.
இத் தகவல்களை மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் நாடாளுமன்றத்தில்தெரிவித்தார்.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு மிகச் சிறந்த நிர்வாகியாவார். தேசிய அளவில் மின்துறையில்பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். பிரதமர் வாஜ்பாய் உள்பட அனைவராலும் பாராட்டப்பட்டவர்.சார்ட்டட் அகெளண்ட்டன்ட் ஆன இவர் சிவசேனையின் எம்.பியாவார்.
சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவுக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அமைச்சர் பதவியில் இருந்துவிலகினார். ஆனாலும், பிரதமர் வாஜ்பாய் இவருக்கு முக்கிய பதவி ஏதாவது தர காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நதிகள் இணைப்புத் திட்டம் இவர் வசம் தரப்பட்டுள்ளது. இது கேபினட் அமைச்சர் பதவிக்குஇணையான பதவியாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மக்களவையில் அமைச்சர் திருநாவுக்கரசு பேசுகையில்,
வரும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் நதிகளை இணைப்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கியஉயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
முன்னாள் மத்திய அமைச்சரான சுரேஷ் பிரபு இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நதிகளை இணைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளில்இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்
இந்தக் குழுவில் சி.சி. படேல் துணைத் தலைவராகவும், சி.டி. தட்டே உறுப்பினர் செயலாளராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் இக்குழுவில் பகுதி நேரஉறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தக் குழுவின் முழு அறிக்கையும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் தயாராகி விடும். இதன் பிறகுதான்நதிகள் இணைப்புக்கான நிதி திரட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
எப்படியும் இவை அனைத்தும் முடிந்து நதிகளை இணைக்கும் பணிகள் துவங்கவே குறைந்தபட்சம் இரண்டுஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது.
சுரேஷ் பிரபு தலைவராக இருப்பதால் இத் திட்டம் வேகம் பிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்தக் குழு தொடர்பான ஒரு அறிக்கையை அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி நேற்று உச்ச நீதிமன்றத்தில்சமர்ப்பித்தார். அதில்,
நாடு முழுவதும் 30 நதிகளை இணைப்பது தொடர்பாக நதிநீர் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. இவற்றில்6 நதிகளை இணைப்பது தொடர்பான ஆய்வறிக்கைகள் ஏற்கனவே தயாராகி விட்டன.
மேலும் அனைத்து நதிகளையும் இணைப்பதற்கான மொத்தச் செலவு இன்றைய மதிப்பின்படி ரூ.5.6 லட்சம் கோடிஆகும் என்று அவ்வறிக்கையில் சோலி சொராப்ஜி குறிப்பிட்டிருந்தார்.
-->