திருமணம் செய்ய முயற்சி: இரு சிறுமிகள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு அருகே தங்களுக்குத் திருமணம் செய்ய முயற்சி நடந்ததால் சகோதரிகளான இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள வீரப்பன்சத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவ சிறுமிகள் சுதா (வயது 12), சாந்தி (வயது 11). இவர்களதுபெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் அண்ணனின் பராமரிப்பில் தான் வாழ்ந்து வந்தனர். இருவருமே அருகில் உள்ள தனியார்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இந் நிலையில் தனது சகோதரி சுதாவுக்கு திருமணம் செய்து வைக்க அண்ணன் முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுதாவும் சாந்தியும் திருமணத்தில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இருவரும் வீட்டிலேயே விஷம் குடித்தனர். மயங்கிக் கிடந்த இவர்களை அண்ணனும் அண்டை வீட்டினரும் ஈரோடு அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இருவருமே உயிரிழந்துவிட்டனர். இந்தச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+