பிலிப்பைன்ஸில் இந்திய வியாபாரி கடத்திக் கொலை
மணிலா:
எலெக்ட்ரானிக் பொருட்கள் வியாபார விஷயமாக பிலிப்பைன்ஸ் சென்ற இந்தியர் ஒருவர் அங்கு சிலரால்கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு இந்தியர் உள்ளிட்ட 8 பேரை பிலிப்பைன்ஸ்போலீசார் கைது செய்தனர்.
வியாபார விஷயமாக சமீபத்தில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார் ரவி. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாஅருகே உள்ள பாராநாக் என்ற இடத்தில் அவரைச் சிலர் கடத்திக் கொண்டு போய் விட்டனர்.
பின்னர் தாங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தால்தான் ரவியை விடுவிப்போம் என்று அவருடைய குடும்பத்தாரைகடத்தல்காரர்கள் மிரட்டி வந்தனர்.
ரவி கடத்தப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில் மணிலா அருகே உள்ள ஒரு கிராமத்தில் அவருடைய உடல்பிணமாகக் கிடந்ததைப் போலீசார் கண்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக ஒரு இந்தியர் உள்பட எட்டு பேரை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அந்நாட்டு அரசேஒப்புக் கொண்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்தான் கடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications