குமரி வள்ளுவர் சிலை பாறைக்கு செல்ல ரூ.70 லட்சம் செலவில் புதிய படகுகள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்ப்பதற்கு வசதியாக ரூ.70 லட்சம் செலவில் 2 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
வள்ளுவர் சிலையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே தற்போதுள்ள படகுகள் போதாத நிலையில் புதிதாக இரண்டு படகுகள் வாங்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக ரூ.1 கோடி செலவில் புதிய நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications