தங்கம் விலை தொடர்ந்து "கிடுகிடு" உயர்வு
சென்னை:
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.516யைத் தொட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.4,056 (அதாவது ஒரு கிராம்- ரூ.507) ஆக இருந்தது. இன்று அது ரூ.4,128 (ஒரு கிராம்- ரூ.516) ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலையிலேயே ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.514யைத் தொட்டுவிட்டது. இன்று மாலை நிலவரப்படி அது ரூ.516 ஆக இருந்தது. புத்தாண்டு நெருங்க நெருங்க இதன் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இவ்வாறு தொடர்ந்து தங்க விலை அதிகரித்துக் கொண்டே போவது குறித்து தங்க வியாபாரிகளும், பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது, ஈராக் மீது அமெரிக்கா தாக்கலாம் என்ற அச்சம், கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி இந்தியாவிலும் ஜப்பானிலும் தங்கத்தின் தேவை மளமளவென்று அதிகரித்துள்ளது ஆகியவை தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாண்டுரங்கன் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications