ரயில் என்ஜினுடன் மோதிய லாரி: முட்டாள்தனமாய் ஓட்டிய டிரைவர் உயிர் தப்பினார்
திருநெல்வேலி:
மண் ஏற்றி வந்த லாரி ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் என்ஜின்மீது மோதியது. ஆனால், இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து மற்றும் கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையேபாப்பான்குளம் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு அரைபாடி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. முருகன் என்பவர் அதைஓட்டி வந்தார். பாப்பான்குளம் ஆள் இல்லா ரயில்வே கேட்டை நெருங்கியபோது, ரயில் என்ஜின் ஒன்று வந்துகொண்டிருந்தது.
ஆனால், ரயிலைவிட வேகமாக ஓட்டி தண்டவாளத்தைக் கடந்து விட முடிவு செய்து லாரியை வேகமாக ஓட்டினார்முருகன். ஆனால் என்ஜின் படுவேகத்தில் வந்தது. இதையடுத்து லாரியின் மீது என்ஜின் மோதுவது உறுதி என்றநிலை உருவானதால் லாரியிலிருந்து கீழே குதித்தார் முருகன்.
அடுத்த வினாடியே ரயில் என்ஜின், லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி தூக்கி எறியப்பட்டது. பலபல்டிகள் அடித்து பின்னர் நசுங்கி நிலையில் தண்டவாளத்தின் அருகே போய் விழுந்தது அந்த லாரி.
காயங்களுடன் தப்பியவிட்ட முருகன் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து காரணமாக நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்திலேயே ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல, அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாகின.
-->