For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பவானி ஆற்றில் புதிய அணை: மத்திய, கேரள, தமிழக அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பவானி ஆற்றின் குறுக்கே கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 3வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கேரள, தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கேரளாவில் பாய்ந்து, பின்னர் மீண்டும் தமிழகத்துக்குள் வரும்நதி பவானி. ஆனால், இந்த ஆற்றின் குறுக்கே பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலி என்றஇடத்தில் அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் தமிழகத்துக்கு பவானி ஆற்று நீர் வருவது தடுக்கப்படும். இந்த அணை கட்டப்பட்டால், கோவை, ஈரோடுமற்றும் தஞ்சை மாவட்டத்தின் 3 லட்சம் ஹெக்டேர் பாசன நிலங்கள் காய்ந்து கருவாடாகும். ஏற்கனவே,கர்நாடகத்தின் திமிர் காரணமாக ஏராளமான தமிழக பாசன நிலம் வறண்டுவிட்டது.

இப்போது பவானி ஆற்று நீரும் நின்றுவிட்டால் தமிழகத்தின் நிலை படுமோசமாகிவிடும் என்பதால் அணை கட்டும்திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபால்ஜி என்பவர் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

இந்த மனு வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அணை கட்டும் திட்டம் தொடர்பாக 3 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைஅமைச்சகச் செயலாளர், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் மற்றும் தமிழக பொதுப்பணித்துறைசெயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X