மூப்பனார் படத்தால் இளங்கோவன், வாசன் இடையே மோதல்
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படத்தை சேர்ப்பதற்கு செயல் தலைவர் இளங்கோவன்உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இளங்கோவனுக்கும், கட்சியின் அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக புதிய உறுப்பினர் அட்டைகள்அச்சடிக்கப்படவுள்ளன.
இந்த அட்டைகளில் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடைய சிறிய படங்ளும், பெரிய சைஸில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படமும் இடம்பெறுவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படத்தையும் சேர்க்க வேண்டும் என்று வாசன் தரப்பினர்கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இளங்கோவன் இதை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த கட்சியாகி வெகு நாட்களாகி விட்டது. மூப்பனார் படத்தைப் போடுவது என்றால்மறைந்த காங்கிரஸ் தலைவர்களாகிய மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்டோருடையபடங்களையும் போட கோரிக்கை வரும். எனவே மூப்பனார் படத்தை போடாமல் இருப்பதே சரி என்றுஇளங்கோவன் கூறிவிட்டார்.
ஆனால், கண்டிப்பாக மூப்பனார் படம் வேண்டும் என்று வாசனும் தெளிவாகக் கூறி விட்டார். அவரது கருத்துக்குகட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரும் மூப்பனாரின் தமிழ் மாநிலகாங்கிரசில் இருந்து தான் காங்கிரசுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எழுந்துள்ள இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இளங்கோவனுக்கும் வாசனுக்கும் இடையே விரிசல்ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தப் பிரச்சினையை இப்போது சோனியாவிடமே கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.-
-->