""நான் சகுனி அல்ல... சாக்ரடீஸ்"": கருணாநிதி
சென்னை:
நான் சாக்ரடீஸாக இருக்க விரும்புகிறேன். சகுனியாக அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் 81வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டிஅக்கட்சியின் சார்பில் சென்னை தங்கச்சாலை பகுதியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருடைய உரையிலிருந்து சில பகுதிகள்:
கட்டாய மதமாற்ற சட்டத்தைக் கொண்டு வர எம்.ஜி.ஆர். நினைத்தார் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதை யாரும்நம்ப மாட்டார்கள்.
பெரியார் எழுதிய புத்தகத்திற்கு இருந்த தடையை நீக்கியவர் எம்.ஜி.ஆர். அவர் மதமாற்றத்தைத் தடை செய்யநினைத்திருப்பார் என்று கூறினால் யாராவது நம்புவார்களா?
அண்ணா, பெரியார் வழியில் நடப்பதாக ஜெயலலிதா கூறக் கூடாது. அண்ணாவையும், பெரியாரையும்அவமதிப்பதை இனியும் பொறுத்தக் கொள்ள மாட்டோம்.
ஒரு மதத்தின் சார்பாக நீங்கள் நடப்பது என்று முடிவு செய்து விட்டால் முதலில் அண்ணா, பெரியார் படங்களைஅகற்றி விட்டு பின்னர் என்ன செய் நினைக்கிறீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்.
நான் ஒன்றும் பெரிய சாணக்கியன் இல்லை என்று அதிமுக பொதுக்குழுவில் கூறப்பட்டுள்ளது. ரொம்பசந்தோஷம். சாணக்கியன் என்றால் சகுனி என்று பொருள். நான் சாணக்கியனாக உயிரோடு இருப்பதைவிட,சாக்ரடீஸாக சாவதையே விரும்புகிறேன்.
என்னையும் அன்பழகனையும் பிரிக்க சில சதிகள் நடந்தன. ஆனால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் அன்பழகன்.
திமுகவின் மூலமாக தமிழர்களுக்கும், திராவிட கலாச்சாரத்திற்கும் தொண்டு செய்து வரும் அன்பழகனை இந்தநேரத்தில் பாராட்டுவது நமது கடமை என்றார் கருணாநிதி.
-->