For Daily Alerts
Just In
ஒரிசாவில் கொத்தடிமைகளாக வாடும் கரூர் இளம் பெண்கள்
கரூர்:
கரூரைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் ஒரிசா மாநலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்குவந்த புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூரைச் சேர்ந்தவர்கள் உஷா (20), ரோஸி (20), செல்வி (18). இந்த மூன்று பேரையும் சிலர் ஆசை வார்த்தை கூறிஒரிசாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
இந்த விஷயம் அந்தப் பெண்களின் பெற்றோருக்குத் தெரிய வரவே அதிர்ச்சியடைந்த அவர்கள் கரூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஒரிசா போலீசாருடன் கரூர் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். அந்தப் பெண்களை மீட்டுக்கொண்டு வருவதற்காக தனிப் போலீஸ் படையும் அம்மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு விரைந்துள்ளது.
-->
Comments
Story first published: Friday, December 20, 2002, 5:30 [IST]