For Daily Alerts
Just In
வைகோவை விடுதலை செய்ய மார்க்சிஸ்டு கோரிக்கை
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறுகையில்,
சட்டவிரோதமான ஒரு சட்டத்தின் (பொடா) மூலம் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்ட்டுள்ளார்.
அவருக்கு எதிராக ஒரு குற்றப் பத்திரிக்கையைக் கூட தமிழக அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசியல் லாபத்திற்காகவே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சட்டத்தை இப்போதாவது வாபஸ் பெறமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வரதராஜன்.
-->
Comments
Story first published: Friday, December 20, 2002, 5:30 [IST]