கோவை சிறை கண்காணிப்பாளருக்கும் கொலை மிரட்டல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான அப்துல் நாசர் மதானி, பாஷாஉள்ளிட்டோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர காவலர் செல்வராஜ் கொலை வழக்கில்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பாஷாவின் மகன் சித்திக் உள்ளிட்ட 8 குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
செல்வராஜ் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரேம்குமாருக்கு சில நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் வந்தது.இவர்தான் காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் 8 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியவர். மேலும் வரும்திங்கள்கிழமை இவர்களுக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்க உள்ளார். இவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் துப்பாக்கிஏந்திய போலீசார் 24 மணி நேரமும பாதுகாப்பு தந்து வருகின்றனர்.
இந் நிலையில் கோவை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் தாசுக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இந் நிலையில் கோவை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் தாசுக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், உன்தலை விரைவில் நடு ரோட்டில் கிடக்கும், நீ எங்கே போனாலும் விட மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது.
சிறைக் கண்காணிப்பாளரின் வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே போல நீதிபதியின் வீட்டுக்கும் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-->