For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கோவில்களின் சொத்துக்கள்: விசாரணை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள 4,500 கோவில்களுக்குச் சொந்தமான நகைகள், நிலங்கள், கட்டடங்கள் குறித்த விவரங்களைஉடனடியாக தாக்கல் செய்யுமாறு இந்து அறநிலையத்துறை அனைத்துக் கோவில் நிர்வாகிகளுக்கும்உத்தரவிட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோவில்களின் அசையும் மற்றும் அசையாசொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

இதற்கு முன் கடந்த 1960ம் ஆண்டு தான் இந்த விவரம் சேகரிக்கப்பட்டது. அதன் பிறகு கோவில்களின்சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் கோவில்களின் நிலங்களை பல முதலைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும்இந்த நிலங்களின் வருமானம் குறித்தும் தகவல் தருவதில்லை. வருமானத்தை கோவிலுக்கும் தருவதில்லை.

அதே போல கோவிலின் சொத்துக்களும் கூட பல கும்பல்களால் ஆக்கிமிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 40ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் கோவில்களின் இந்த சொத்துக்கள் குறித்த விசாரணை ஆரம்பித்துள்ளது.

தகவல்கள் சேகரிக்கப்பட்டவுடன் கோவில் சொத்துக்கள் குறித்த ஒரு புத்தகத்தையும் வெளியிடவும் அரசு முடிவுசெய்துள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X