மதுரை நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி: பெரும் பரபரப்பு
மதுரை:
மதுரை நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியைத் தொடர்ந்து அங்கு இன்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை-அண்ணா நகர் போலீஸ் நிலையத்துக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நீதிமன்றத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் கூறினான்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் நீதிமன்றத்திற்கு விரைந்தனர் போலீசார்.
நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, அங்கு வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்றுபோலீசார் சல்லடை போட்டுத் தேடினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் நீதிமன்ற வளாகத்திற்குள் சிக்கவில்லை. இதையடுத்து அந்த தொலைபேசிவெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந்தப் புரளி காரணமாக மதுரை நீதிமன்ற வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றப் பணிகளும்சுமார் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்டன.
வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பியவன் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications