தர்மபுரி வனப் பகுதியில் மர்மமாய் இறந்து கிடந்த 3 பேர்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி அருகே அஞ்செட்டி காட்டுப் பகுதியில் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் வன விலங்குகளால்கொல்லப்பட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று தெரியவில்லை.

கொட்டகரை என்ற கிராமத்தைச் சேர்ந்த மாதப்பா, சித்த குட்டப்பா, பசப்பா. மூவருமே 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர்கள்.இவர்கள் விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்று வருவது வழக்கம்.

இரு தினங்களுக்கு முன் காட்டுக்குள் சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர் காட்டுப்பகுதியில் தேடினர்.

அடர்த்தியான ஒரு வனப் பகுதியில் இந்த மூவருமே இறந்து கிடந்தனர். இவர்கள் எப்படி இறந்தனர் என்று தெரியவில்லை.

காட்டுப் பகுதியில் நிலங்கள் வைத்திருக்கும் சிலர் தங்கள் பகுதிக்குள் வன விலங்குகள் வருவதைத் தடுக்க மின் வேலிகளைசட்டவிரோதமாக அமைத்துள்ளனர். அதில் சிக்கி இவர்கள் இறந்தனரா அல்லது வன விலங்குகளால் கொல்லப்பட்டனரா என்றுதெரியவில்லை.

இவர்களை யாரும் கொலை செய்யும் அளவுக்கு விரோதம் ஏதும் இல்லை என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+