நாகப்பா குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம்
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வற்புறுத்தக் கூடாதுஎன்று அவருடைய குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா கடந்த 8ம் தேதி காட்டுக்குள் மர்மமான முறையில் பிணமாகக்கிடந்தார்.
நாகப்பாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பதவி விலக வேண்டும் என்று கோரிபா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடந்த வாரம் அம்மாநில சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தின.
அவருடைய மரணம் குறித்து நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே நாகப்பாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவருடையகுடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்று கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் நாகப்பாவின் குடும்பத்தினருக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில்,
நாகப்பா கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வற்புறுத்த வேண்டாம். இப்பிரச்சனையில் நீங்கள் யாரும்பேசக் கூடாது.
சி.பி.ஐ. விசாரணைக்குத் தொடர்ந்து வற்புறுத்தினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த நாகப்பாவின் மனைவி பரிமளா, தன்னுடைய மருமகன் கிரண்பட்டேலுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
என் கணவர் கொலைக்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளும் வரையில் தொடர்ந்து போராடுவேன்.ஆனால் நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் பரிமளா கூறினார்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications